56
கங்கா
இருக்கின்றனவோ இல்லையோ ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது ? அது எவ்வளவு தாங்கும் ?
அதுதான் முக்கியம்.
அதுவேதான் அது.
அதுவன்றி எதுவுமில்லை:
எது அது அதுதான் புரியவில்லை. மூளை குழம்பு கிறது.
宽
சின் எண்ணங்களை நானே நூற்று, என் மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக் கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக் கிறேன்.
பசிக்கிறது. பசிக்கிறது. எப்பவும் பசித்துக்கொண்டே யிருக்கிறது.
நீங்கள் இருந்தவரை எனக்கு வயிற்றுக் குறைவே. யில்லை. ஆனால் இப்பொழுது, நான் ஓட்டை ஏந்தி 23ಣಖಳ್ಲು நின்றால், யார் போடுகிறார்கள்? “நீ நோவா மல் தின்று மேனி மொழு மொழுவென வளரத்தான் நாங்கள் எங்கள் உடம்பைக் கசக்கிப் பிழிகிறோமா? எங்க ளுக்குக் குடும்பம் இல்லையா? உனக்கு உழைத்துப் போடத்தான் ಅtLSTEDTಡಿ யிருக்கிறோமா? இந்த வயசில் யாரை ஏமாற்றடா பண்டார வேஷம்? இன்னும் என்னென்னவோ ஏ.சி. சீறி விழுகிறார்கள். இன்று ஒருவன், அவனுக்கு என்ன ஆத்திரமோ மடிக்கொம்பால் என் முதுகில் இரண்டு போட்டே விட்டான்.