பக்கம்:கங்கா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கங்க? தான் ஆட்டம் தொடங்கிற்று. ஆனால் பொழுது போக வில்லை. சினிமாவுக்கு நேரமாகிவிட்டது. துக்கமும் வரவில்லை. என் கட்சி இரண்டு பழங்கள் ஏறிவிட்டது. அவர் களை நாங்கள் இதுவரை ஒரு பழம்கூட ஏறவிட 珀 Xo > ※ 必 3. _ s ot 好 多 வில்லை. எங்கள் காய்கள் துரத்தித்துரத்தி எதிர்க் காய்களை வெட்டின. மங்கைக்குக் கண்கள் ஜ்வலித்தன; இதன்மூலம் வெகு நாளைய, வெவ்வேறு பழிகளைத் தீர்த்துக் கொள்வதுபோல். ஆனால் கஸ்தூரிக்குத் திடீரெனத் தொகை பெரு கிற்று. வெறும் தாயக் கட்டைகள் தாம். ஆனால் அவைகளுக்கும்தான் வெறிபிடிக்கிறது : "தாயம் பன்னிரண்டு ஐந்து-" "இருபன்னிரண்டு ஒரு தாயம் ஆறு ஈரைந்து -” "இரு பன்னிரண்டு ஒரு தாயம் ஈராறு ஈரைந்து - மந்திரம் சொல்வது போல், ராகமாய்த் தொகையை உருப்படுத்திக் கொண்டே கஸ்துரி கட்டைகளை வீசி உருட்டினான். தொகை பறந்தது. "ஈராறு ஒரு தாயம் மூவைந்து இரு பன்னிரண்டு.” சாவித்ரி களிப்பில் கைகொட்டினாள். மங்கை அவளை வெறித்தாள். மங்கையின் கண்கள் கலப்பற்ற துரிய பகையைக் கக்கின. "முப்பன்னிரெண்டு, மூவைந்து, இருதாயம் ஈராறு-" "ஒரு நிமிஷம் கண்களில் வினாவுடன் தலை நிமிர்ந்தான். புருவங்கள் கம்பளிப் பூச்சிகள் போல் நெளிந்தன. உள். பரபரப்பில் லேசாய்த் திறந்தவாய். கண்களில் தனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/90&oldid=764473" இலிருந்து மீள்விக்கப்பட்டது