இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லா. ச. ரா
83
முறிந்து விழுந்தது. என் கண்கள் இறுக மூடிக் கொண்டன. ஆனால் அதற்கு முன்னேயே அது என் இமையுள் புகுந்துவிட்டது. உள்மண்டையை மூன்று விரியாய்ப் பிளந்தது. என் கீழ் சைக்கிள் நிலைதடுமாறித் தத்திற்று. என்னிடமிருந்து புதுக் குரலில் ஒரு வீறல் கிளம்பிற்று.
"கஸ்துரி !”
ஒரு பேரிடி வானின்று விடுபட்டு உருண்டு உடைந்து நொறுங்கிற்று. கல்மாரி என பெருந்துளிகளில் மழை சரசரவென எங்கள் மேல் இறங்கிவிட்டது.