பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பான விளேயாட்டு 4 :

பேரிட்ட் மாமியார் வந்தால் என்ன ? பெண் ணுக்கு நாத்தனர் வந்தால் என்ன ?

பெண் இல்லை . தங்கம் பெண் இல்லை. ரெட்டைச் செருப்பாலே வந்தால் என்ன ?

(முன்மாதிரியே எல்லா அடிகளும் வரும்.)

தாங்கள் பெண்ணேத் தேடிக்கொண்டு வந்த சிரமத்தை எடுத்துக் கூறிப் பெண் வீட்டார் உள்ளத்தில் இரக்கம் உண்டாக்க முயன்ற பிள்ளே விட்டார், தங்கள் கருத்து கிறைவேருமல் போகவே யோசித்துப் பார்க்கிருர்கள்.

பெண்ணுக்குப் பரிசம் போட்டால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள். பொன்னும் பூவும் தருவதாகச் சொல்லலாம்” என்று சம்பிரதாயத்தை நினைந்து, சொல்ல ஆரம்பிக்கிருர்கள்.

பிள்ளை வீட்டார் :

ஒரு கழஞ்சுப் பொன்னுத் தாரேன்

வாயேன் மருமகளே

ஒரு கழஞ்சுப் பூவுந் தாரேன்

வாயேன் மருமகனே ?

(கழஞ்சு என்பதைக் கர்ண்டி யென்றும் கிளிஞ்ச லென்றும் பாடுவார்கள்.1 . - - - -

பெண் வீட்டார் - -

ஒரு கழஞ்சுப் பொன்னக் கண்டு -

ஆற்றுவனே துாற்றுவனே ஆறுகடலாய்க் காய்ச்சுவனே ! . சின்னண்ணன் காலுக்குச் சிலம்படிக்கப் பத்தாது. பெரியண்ணன் கைக்குப் பெரம்படிக்கப் பத்தாது.