பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகையும் மறுைம் 39

ஒன்றை ஏக்தி வந்து, பெண்ணே, இது உன் அழகுக்கு ஏற்றது என்று அளித்தான். இவளும் அதை வாங்கி அணித்தாள். அந்த மலர் காரணமாக இருவர் இருதய மலர்களும் இணைந்தன" என்று சொல்வது ஒரு முறை. மலர் காரணமாக நேர்ந்த தொடர்பாகிய இதை, "பூத்தரு புணர்ச்சி” என்று இலக்கணக்காரர்கள் சொல்வார்கள். மலர், காதல் உள்ளங்களை ஒன்றுபடுத்தும் அரிய பொரு ளாகிறது. மாதர், மலருக்கு உள்ளத்தைக் கொள்ளே கொடுத்தனர் என்ற செய்தியை இந்த வழக்கம் தெரிவிக்கிறது. -

| lத்தகத்தில் மட்டும் அல்ல ; உலகத்திலும் நகையா லும் மலராலும் மடமங்கையரை மயக்கும் ஆடவர் இருக் கிருர்கள். ஆகையால், உலக நிகழ்ச்சிகளே உள்ளபடி தெளிந்து அதல்ை உண்டாகும் உணர்ச்சி வசப்பட்ட நாடோடிப் பாவலன், மலரும் நகையும் மங்கையரை மயக்கும் பொருள்கள் என்பதைப் பலவிதமாகச் சொல்லு கிரு:ன். காடோடி இலக்கியத்தில் வரும் காதலர், காதலி மா ைஅணுகி ரோஜாப்பூவையும் மல்லிகைப் பூவையும் காட்டிக் காதல் புரிகிருர்கள். -

ரயில் மேலே போற பெண்ணே

ரோஜாப்பூ வாங்கித் தாறேன் ரயிலே விட்டுக் கீழிறங்கி வா வா ա: 1

ம8லமேலே போற பெண்ணே

மல்லிகைப் பூ வாங்கித் தாறேன். மலேயை விட்டுக் கீழிறங்கி வா வா வா t

தன் காதலியை வண்டியில் ஏற்றிக் கொண்டையிலே ரோஜாப்பூவைச் சூட்டி அண்டையிலே தான் அமர்ந்து கொள்கிருன் ஒரு காதலன். -