பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமியாரும் மருமகளும்

ந்த நாட்டில் மாமியார் மருமகள் சண்டை யென்பது மனித சமுதாயம் உண்டான நாளிலிருந்தே ஏற்பட்டிருக்க வேண்டும் போலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னும் அதே நிலை, இன்றும் அதே நிலை இருக்கிறது என்றால் நம்முடைய சமுதாய வாழ்விலே புரையோடிப் போன புண் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.

இரண்டாயிர வருஷங்களுக்கு முன் தமிழில் உண்டான நூல் வரிசைகளுள் நாலடியார் என்ற நீதி நூல் ஒன்று. ஜைன முனிவர்களால் இயற்றப்பட்ட 400 பாடல்களை உடையது. அதில் ஒரு பாட்டு வருகிறது. உலகில் அறிவுடையவனிடம் செல்வம் இருப்பதில்லை; செல்வம் உள்ளவனிடம் அறிவு இருப்பதில்லை. இரண்டும் சேர்ந்து ஓரிடத்தில் மிகவும் அருமையாகத்தான் இருக்கின்றன. இந்த விஷயத்தைப் புலவர்கள் அன்றும் சொல்லியிருக்கிறார்கள். இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அன்று புலவனென்றும் மன்னனென்றும் இரண்டு சாதியைப் பிரித்துச் சொன்னர்கள். இன்று எழுத்தாளனென்றும் முதலாளியென்றும் பிரித்துச் சொல்லுகிறார்கள்.

செல்வமும் கல்வியும் ஒன்று சேராததற்கு ஜைன் முனிவர். இந்த நாட்டுச் சம்பிரதாயத்துக்குப் பொருத்தமான காரணம் ஒன்றைக் கண்டுபிடித்தார். கல்விக்குக் கடவுளாக நாமகளைக் கொண்டாடுகிறோம். அப்படியே செல்வத்திற்குத் தெய்வமாக மகா லக்ஷ்மியை வைத்துப் போற்றுகிறோம். மகாலக்ஷ்மி திருமாலின் தேவி. நாமகள்