பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கஞ்சியிலும் இன்பம்

ஏதோ இரைச்சல் போட்டாள். பிறகு வெறுங்கையுடன் வெளியிலே வந்தாள். "ஏ, பிச்சைக்காரா, வீட்டுக்கார அம்மாள் என்று சொன்னாயே, அவள் அல்ல வீட்டு எஜமானி. நான்தான் எஜமானி. அவளுக்கு அதிகாரம் ஒன்றும் இல்லை. அவள் இல்லையென்று சொன்னதை நீ மறந்துவிடு. இதோ நான் சொல்கிறேன். பிச்சை இல்லை, போ" என்று சொல்லி விடு விடுவென்று உள்ளே போய் விட்டாள்.

இல்லையென்று சொல்வதற்கும் மருமகளுக்கு அதிகாரம் இல்லையாம்!

மாமி ஒருத்தி மருமகளை ஆண்ட கதை ஒன்று பாட்டாக நாடோடி இலக்கியத்தில் வருகிறது.

புருஷன் கோட்டைக்குச் சென்று உத்தியோகம் பார்க்கிறவன். மரும்கள் புதியவள். மாமியாரும் நாத்தியும் வீட்டு ராஜ்யத்தில் செங்கோல் செலுத்துபவர்கள். அவர்கள், புருஷன் வேலைக்குப் போன பின்பு மருமகளை அதட்டி மிரட்டி வேலை வாங்கினர்கள்.

மாமி ஒருத்தி
மருமகளை ஆண்ட கதை:
பூமி அதிர்த்ததுவாம்
பூலோகம் பொங்கினதாம்!
கொன்றவனார் காலையிலே
கோட்டைக்குப் போனபின்பு
வாடி சிறுக்கி என்றாள்,
வரகை அரையும் என்றாள்.
போடி சிறுக்கி என்றாள்.
புழுங்கள்தெல்லைக் குத்தும்என்றாள்.
தாதிமார் தம்முடனே
தண்ணீர்க்குப் போம்என்றாள்