பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சை மகளிர்

மெல்லியலார் என்று பெண்களைக் கூறுவதற்கு அவர்களுடைய உடலமைப்பு மட்டும் காரணம் அல்ல; அவர்களுடைய உள்ளக்கூறும் மென்மையுடையதே. உலகத்தில் வலிய வேலைகளையும் ஏற்றுக்கொண்டு புதுமைப் பெண்கள் ருஷ்யா முதலிய நாடுகளில் 'சரிநிகர் சமானமாக' உழைத்தாலும், ஆடவனுடைய உடலுறுதியும் உள்ள உறுதியும் அவர்களிடம் காண்பது அரிது. இயற்கையில் மென்மைக்கு இருப்பிடமாகப் பெண்ணுலகத்தைப் படைத்திருக்கிறான் பிரமதேவன்.

இந்த மென்மை காரணமாக, எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தாலும், வலிய ஆடவனது ஆட்சிக்கு அடங்கிப் போகும் இயல்பு அவர்களிடம் அமைந்து விடுகிறது. ஆடவர்கள் மெல்லியலாரை நாடும்போதெல்லாம் காதலுணர்ச்சி கொண்டே புகுகிறார்களென்றும் சொல்வற்கில்லை. தம்முடைய இச்சையை நிறைவேற்றிக் கொள்வதையும் குடும்பப் பிரதிஷ்டை செய்வதையுமே முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ஆடவர் மகளிரை மணக்கிறார்கள். இந்த உண்மையை மறைப்பதிலும், காதலென்றும் லட்சிய வாழ்வென்றும் காவியம் பேசுவதிலும் பயன் இல்லை. உலகம் உலகத்தான்; "இருள் தருமா ஞாலம்" என்று பெரியோர்கள் தெரியாமல் சொல்லவில்லை. எத்தனையோ கால அது பவத்தால் உணர்ந்து தெரிவித்த உண்மை அது.

பாமர மக்களில் ஆடவர்களின் மயக்கில் ஈடுபட்டுக் கண்டிக்கும். பெனாங்குக்கும் ஓடிப்போன பெண்கள் எத்-