பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூசாரி வரம்

3


போட்டு ஆடுவது வழக்கம். இந்த ஆட்டத்துக்கு வெறியாட்டு என்று பெயர்.

    ஊரில் ஏதேனும் நோய் வந்தாலும், ஒரு குடும்பத்தில் ஏதாவது துன்பம் வந்தாலும் வேலனை வரவழைத்து முருகனுக்குப் பூசை போடச்செய்து கூத்தாடுவது. அக்காலத்துக் குறவர் வழக்கம். தங்கள் பெண்ணுக்கு மணம் ஆவதற்கு முன்னால் வெறியாடுவதும் உண்டு.
    
    இக்காலத்தில் பூசாரி மாரியம்மன், காளி முதலில் கிராம தேவதைகளைப் பூசிப்பவனாக இருக்கிறான். ஆவேசம் வந்து ஆடுவதும், உடுக்கடித்து வழிபடுவதும் இன்னும் இருக்கின்றன, அவன் பாடும் பாட்டுக்கள் தோத்திர மாகவும், பெரிய கதைகளாகவும் உள்ளன. பாரத ராமாயணக் கதைப் பகுதிகளைத் துரோபதையம்மன் திருவிழாவைப் போன்ற விசேஷ நாட்களில் தொடர்ச்சியாகப் பாடும் பூசாரிகள் இன்றும் இருக்கிறார்கள். ஆவேசம் வந்து குறி சொல்லும் பூசாரிகளே இன்றும் கிராமாத்தரங்களில் காணலாம். 
    

குறி சொல்லும் தொழிலும் பண்டைக் காலந்தொட்டே பூசாரிகள் பரம்பரைக்கு உரியதாக இருக்கிறது. வேலனைப் போலவே குறத்தியும் குறி சொல்வாள். பேய் பிடித்த பெண்களுக்கு இன்ன பேய் பிடித்ததென்று குறி சொல்லச் சங்ககாலத்து வேலனுக்குத் தெரியும். இந்தக் காலத்துப் பூசாரிக்கும் தெரியும்.

*
    கிராமங்களில் தொழில் செய்து கூலி வாங்கிப் பிழைக்கும் ஏழை மக்களுக்குப் பூசாரிதான் குரு; அவன் தான் 'சோசியகாரன்'; அவனே பாட்டும் கதையும் சொல்லும் பாகவதன். தெய்வத்தின் திருவருளைவிட அவன் திருவருளே மிகவும் அவசியம் "சாமி வரங் கொடுத்தாலும்