பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொங்கல் களியாட்டம் 89.

கஞ்சா மயக்கமா 7

கள் மயக்கந் தோணுதா ? ஏ கரையிலே

இலந்தை பழுத்திருக்கும். ஏறி உலுக்கலாம்

எஞ்சோ ட்டுச் சின்னண்ணு ; பாத்துப் பொறுக்கடி ,

பாதகத்தி அம்மாயி ! அம்மாயி அம்மாயி1

ஏண்டி ஏண்டி அம்மாயி! பத்துப் பணத்திலே

முத்துவண்ணம் கொண்டது போட்டு மடிச்சது;

பொட்டியிலே வச்சது; கறையான் கடிக்குதுன்னு

கட்டிவச்ச அம்மாயி ! பூரான் கடிக்குதுன்னு

போற்றிவச்ச அம்மாயி1

அம்மாயி அம்மாயி1 இது கரூர்ப் பக்கத்தில் பாடும் பாட்டு.

கடலோரத்தில் உள்ள சென்னைப் பக்கத்திலே பொங் கல் பாட்டிலே கப்பல் வருகிறது. பொங்கல் பூசைக்கு வேண்டிய கரும்பு வருகிறது. சுவாமிக்குப் புஷ்பம் சாத் தும் வழக்கம் வருகிறது. பறங்கிக்காரன் வருகிருன்

ஒருகட்டுக் கரும்பாம். பறங்கி

ஒண்ணுலே இரும்பாம். அந்தக்கட்டுக் கரும்பைப் பறங்கி

ஏத்துடா கப்பலிலே. ...