பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கல் களியாட்டம்

91

ரெண்டுமரந் தோப்பாம்; ரெண்டு
       புன்னே மரம் காய்ப்பாம்.
............................
       போகலாமடி கன்னிகளா!

ஒருகட்டுச் சந்திலே நாங்கள் இருப்போம்;
       ஒருகட்டுத் தாழம்பு, நாங்க முடிப்போம்;
              வாதாடி - நாம்ப - சூதாடி
ரெண்டுகட்டுச் சந்திலே நாங்கள் இருப்போம்
       .................................சூதாடி.

ஒரு இலை பறிச்சு முன்னே மடிகோலி
       ஒரு பணத்துக்கும் ஒரு இலைக்கும்
       தாழ்ந்ததடி தத்தாங்கி.

ஓரம்மிப் பூவுருட்டி அரைக்கும்பொடி மஞ்சள்
மாருக்கும் தோளுக்கும்
மஞ்சள் சரட்டுக்கும்
மோதிரக் காலுக்கும்
நீலவர்ணப் பொட்டுக்கும்.

ஒருசரமாம் கீரைமணி
ஆதி யம்மன் சோதி
அம்மான் மகள் ராணி
உப்பளக்கும் மேடை
ஒதிய மரம் சாலை
விளையாடப். பெண் பிறந்தாள்

கமலக்கண்ணி மேடை!