பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
கடக்கிட்டி முடக்கிட்டியும்
நான்கு திருடர்களும்

வழக்கம் போல ஒரு நாள் காட்டிலிருந்து வெட்டி வந்த விறகைக் கடக்கிட்டி முடக்கிட்டியின் முதுகில் வைத்துக் கிழவன் பட்டணத்திற்கு ஓட்டிச் சென்றான். அங்கே விறகை நான்கு ரூபாய்க்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தைத் தன்னிடமுள்ள ஒரு கிழிந்த பையில் போட்டுத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு அலுப்புத் தீரச் சத்திரத்திலே படுத்து உறங்கலானான்.

கிழவன் துரக்கத்திலே கொஞ்சம் புரண்டு படுத்தான். தலைமாட்டில் வைத்திருந்த பை நன்றாக வெளியில் தெரிந்தது.