பக்கம்:கடற்கரையினிலே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19. சிதம்பரனார்

தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டாரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டார் சிதம்பரனார். அவர் தந்நலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். அன்னார் செய்துள்ள சேவையை நினைத்தால் உடல் சிலிர்க்கும்; உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்; உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகும். 'இந்தியக் கடலாட்சி எமதே' எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறி மயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். தென்னாட்டுத் திலகர் எனத் திகழ்ந்தவர் அவர். பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசியதற்காக - நாட்டிலே சுதந்தர உணர்ச்சியை ஊட்டியதற்காக - அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் துரத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார்; ஒரு நாள் மாலைப் பொழுது !துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக்கடற்கரையிலே நின்று அவர் பேசலுற்றார்:

"தென்னாட்டுத் துறைமுகமே ! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/93&oldid=1247681" இலிருந்து மீள்விக்கப்பட்டது