பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

லிருந்து அளித்தான். ஒரு பிராங்க் நாணயமும் கொடுத்தான்.

     பெப்பி அக்காசைக் கடித்துப் பார்த்தான். 'வர்தனம் ஐயா! இது நல்ல நாணயம் என்றுதான் தோன்றுகிறது; இல்லையா!' என்று கூறித் தன் நன்றியை அறிவித்துக் கொண்டான்.
     பெப்பியின் உயர்வை அறிய வேண்டுமானால், அவன் தனியாக எங்காவது பாறைகளிடையே நின்று கருங்கல்லின் இருண்ட கதையைப் படிப்பதுபோல் பாறைப் பிளவுகளையே கூர்ந்து கவனித்து, யோசனையில் ஆழ்ந்துவிடுகிறபோது பார்க்கவேண்டும். அவ்வேளைகளில், ஒளி நிறைந்த அவனது கண்கள் வியப்பினால் விரிந்து மின்னும்; மென் காங்கள். முதுகுக்குப் பின்னால் கட்டுண்டிருக்கும்; சற்றே சாய்ந்த தலை இளங்காற்றில் ஆடி அசையும் பெரிய புஷ்பம் போல அசைவுறும். ஏதேனும் ஓர் இன்னிசைப் பண்ணை முனங்கிக் கொண்டே நிற்பான் அவன் எப்பொழுது பார்த்தாலும் அவன் பாடிக் கொண்டுதானிருப்பான்.
     பூக்களைக் கவனித்து கிற்கும் பொழுது, சுவர்கள் மீது மண்டிக் கிடக்கும் கொடிகள் பூத்துக் குலுங்குகிற பர்ப்பிள் கிறப் புஷ்பங்களைப் பார்த்து மகிழும் போதும், அவனைக் கவனிப்பது தல்லதுதான். கடற் காற்றின் மென் மூச்சால் துடிப்புறம் மலர்களின் பட்டு இதழ்களின் இன் துடிப்பைக் கூர்ந்து கவனிக்க முயல்கிறவன் மாதிரி, முறுக்கேறிய வினைத் தந்திபோல், நிற்பான் அவன்.
      கவனித்து கிற்கும் பேதே ஃபியாரினே...ஃபியா ரினே...? என்று பாடிக்கொண்டு மிருப்பான்.
      வெகு தொலைவி லிருந்த கடலின் ஆழ்ந்த பெருமூச்சு பொங்கி வரும், பெரிய தம்புரச எதுவோ ஒன்றின் காதப் பெருக்கு போல, வன்ன மலர்களினூடே ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும் வண்ணப் பூச்சிகள். பெப்பி கலை