பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25

பல் வர்ணப் பறவைகளின் ஜோடி போலவே காட்சி தந்தன அரைகுறையாக மறந்துபோன பழக் கனவு போலப் பொய்த் தோற்றம் பெற்றிருந்தது. அந்தக் காட்சி முழு வதும்.

சிறுசிறு கூழாங் கற்கள் படிந்த கடற்கரையிலே, பாறைகளின் கிழலில் அமர்த்திருந்த கிழட்டுச் செம்படவன் ஒருவன் சொன்னன், இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குன் கடும் புயல் வரும் என்று.

மனம் கிறைந்த கடற் பாசிகள், துருவேறிய கிதமும் பொன் வண்ணமும் பசிய கிறமும் பெற்றவை, அலைகளி னுல் கரை சேர்க்கப்பட்டு சிறு கற்கள் மீது பரந்த கிடந்தன. எரிக்கும் வெயிலில் திய்க்கும் கற்களில் கிடந்து கடற்பாசி கள் கருகி உப்புக் காற்றிலே செடி மிகுந்த அயடின் நாற் றத்தையும் கலக்க விட்டன. சுருளும் சிற்றலைகள் கடலோ ரத்திலே தொட்டுப் பிடித்து ஒடியாடின.

உலர்ந்து வாடிய சிறிய முகம், வளைந்த மூக்கு, தோலின் இருண்ட மடிப்புகளினுள் மறைந்து கிடக்கும் மிகக் கூரிய உருண்டைக் கண்கள், இவற்ரு லெல்லாம் அந்தக் கிழச் செம்படவன் ஒரு பறவையை ஒத்திருத்தான். கொடு முர டாய் வதங்கிப்போன அவன் கைவிரல்கள் முழங்கால் மேல் அசைவற்றுக் கிடந்தன.

"ஐம்பது வருஷங்களுக்கு முக்தி, வலின்யார்’ என்று ஆரம்பித்தான் அக்கிழவன். அலைகளின் முண்முணப்பு, வலிக்காடப் பூச்சிகளின் ஓயாத முனகல் இவற்றுடன் ஒன்றி யிசையும் தொனியிலே பேசினுன் "அவன். "இதைப் போலவே பிரகாசமாய் பிரமாதமகயிருந்த ஒரு நாள் என் கினைவுக்கு வருகிறது. அன்றும் எல்லாம் சிரித்துப் பாடிக் கும்மாளி யிடுவதாகவே தோன்றியது. அப்பொழுது எங்க அப்பாவுக்கு நாற்பது வ்யசிருக்கும். எனக்குப் பதினுறு வயது. காதல் புரியும் பருவம். கருணை நிறைந்த சூரியன்