பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

சொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லித் தரு கிறேன்...”

  "தனித்தனி வகை மீன்களைப் பற்றி, எங்கே எப் பொழுது எப்படி அவற்றைப் பிடிக்கலாம் என்பது பற்றி யெல்லாம் தான் அறிந்திருந்தவை அனைத்தையும் எனக்குச் சொல்ல ஆரம்பித்தார் ஆவர்.
   எங்கள் நிலைமை எவ்வளவு படுமோசமாக யிருந்தது என்பதைக் கவனித்ததும் இதைவிட நாம் பிரார்த்தனே செய்வது நல்லதில்லையா அப்பா? என்றேன். சதையிலே பதித்துக் குதறிடத் அடித்த பற்களோடு காலா கிக்கிலிருச் தும் பாய்ந்து வரும் வெண்ணிற வேட்டை சாய்களிடையே சிக்கித் தவிக்கிற ஒரு ஜோடி முயல் குட்டிகள் போலிருக் தோம் காங்கள்.
   கடவுள்தான் எல்லாவற்றையும் பார்க்கிருரே! என் முன் அவர். தரையிலே வாழ்வதற்காகத் தாம் சிருஷ்டித்து விட்ட மனிதர்கள் இப்போது கடலிலே தவியாய்த் தவித் துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களிலே ஒருவன், பிழைக் கும் நம்பிக்கையை இழந்து விட்டதனல், தான் அறிந்து தேர்ந்த அனுபவ ஞானத்தை யெல்லாம் தன் மகனுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதை யும் அவர் அறிவார். மண்ணுக்கும் மனிதருக்கும் முக்கிய மானது உழைப்பு. இதி கடவுளுக்குக் தெரியும்... .
   தனது தொழில் முறை பற்றித் தான் அறிந்தத் அனைத்தையும் எனக்கு அறிவித்து முடிந்ததும், ஒரு மனிதன் தன் சகோதர மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பற்றியும் அவர் சொன்னர்.

இதுதான் எனக்குக் கற்றுத்தர வேண்டிய நேரம் தாரயிலிருக்கையிள் நீங்கள் இதைச் செய்யவில்லையே? என்றேன்.