பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


உழைத்தவர்கள் இவர்கள். செப்பு, வெள்ளிக் காசுகளை விட உழைப்புதான் மிக முக்கியமானது. நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தைப் பார்க்கிலும் என்றுமே மிக உயர்ந்தது உழைப்பு. பணம் போய்விடும், உழைப்பு மிஞ்சும்... இவர்கள் சந்தோஷமாகவும் அடக்கமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை கடினமானது தான்; என்றாலும் இவர்கள் முணமுணக்க வில்லை. இனியும் இவர்கள் வாழ்க்கை கொடுமைகள் அதிகரித்ததாகவேயிருக்கும்; எனினும் இவர்கள் முணுமுணுக்க மாட்டார்கள். இவர்களுக்குத் தேவை எற்படும் காலத்தில் நீங்கள் உதவி புரிவீர்களாக நல்ல கைகளும் திண்ணிய இதயமும் பெற்றவர்கள் இவர்கள்.'

“இப்படி எனக்கும், இடாவுக்கும், சமுதாயம் முழுமைக்கும் புகழ் மொழிகள் பல பாடினார் அவர்.”

இழந்த இளமைக் கனலை மீண்டும் பெற்ற தனது ஒற்றைக் கண்ணுள் எங்கள் எல்லோரையும் கவனித்த அக்கிழவன் முடித்தான்:

“இதோ, ஸின்யாரி, மக்களைப் பற்றி நான் உங்களுக்கு கொஞ்சம் சொல்லி முடித்து விட்டேன். அது நன்றாகத் தானேயிருந்தது, இல்லையா?”