பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 யாவில் பணம் பெருகும்போது இயந்திரங்களைக் கொண்டு காங்கள் பஞ்சுடைத்து கெய்வோம் என்று என் தந்தை சொல்லுகிருர். முடிச்சும், திண்டு திண்டாகவும் இல்லாமல் கையால் செய்வதைவிட நன்ருக இயந்திரம் செய்கிறது. கெய்வதை மட்டும் கிராமங்களிலே அப்பொழுது செய் வோம், ஆளுல் இப்பொழுது முடியாது.”

  • உன்னுல் நூல் நூற்கமுடியுமா?’ என்று கேட்டாள் ஜூடி,

' அதைச் செய்யக்கூடிய எத்தனையோ இந்தியப் பெண்களில் நான் ஒருத்தி!' என்று பாதி சிசித்துக் கொண்டும், பாதி முகத்தைச் சுளித்துக் கொண்டும் லட்சுமி பதில் சொன்னுள். கிராமத்து வீடுகளின் உட்பக்கம் எப்படியிருக்குமோ என்று ஜூடியின் தாய் ஆச்சரியத்துடன் கேட்டபொழுது, லட்சுமி அவர்களை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்ருள். முன்னுல் தாழ்வாரம், அதற்குப் பின்னல் ஓர் அறை-ஒரே அறை, அதிலே மேஜையைப்போல அகலமான ஒரு கட்டில் சில ஜாடிகள் களிமண் ணுல் செய்து சுட்ட சட்டி பானைகள், கந்தலான ஆளுல் கன்ருக மடித்துவைத்து அடுக்கியுள்ள துணிகள் எல்லாம் இருந்தன. இவ்வளவுதான் அந்தக் குடும்பத்திற்குச் சொந்தம். அவர்களுக்குச் சாப்பிட என்ன இருக்கிறது?’ என்று ஜூடி கேட்டாள். "மாலேயிலே சுடுசோறும் காய்கறிகளும்; மீதியாக உள்ள சாதத்தைப் பழைய சாதமாக ஊறுகாயோடு அடுத்த காள் காலையில் சாப்பிடுவார்கள். சில சமயங்களில் பருப்புண்டு. ஆளுல் விற்கக்கூடியதையெல்லாம் விற்று விடுவார்கள்’ என்று பதில் சொன்னுள் லட்சுமி.