இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
15
கண்ணை விழித்துப் பார்த்தபொழுது, அம்பிகையை மறைத்தவாறு ஒருவர் நின்று கொண்டு, மிகவும் பக்தி நிரம்பிய புன்னகையுடன் நோக்கி தன்னை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் தருமலிங்கம்.
வணங்கி நின்றவர், நகை செய்யும் நடேசன்.
உனக்கு ஆயுசு நூறய்யா! என்று தருமலிங்கம் சிரித்துக்கொண்டே கூறினார்.
‘உங்க தயவு இருந்தா, இன்னும் நூறுவயசு கூட இருப்பேங்க’ என்று மரியாதையுடன் பதில் சொன்னார் நடேசன்.
உன்னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன். அம்பிகை முன்னாலேயே உன்னைப் பார்த்து விட்டேன்.
எல்லாம் கடவுளோட கருணைதாங்க! என்று மீண்டும் கைகுவித்து வணங்கினார் நடேசன்.
நடேசன்! உனக்கு ஒன்றும் வேலையில்லையே!
‘இல்லை’ என்பதற்கேற்றவாறு தலையை மெதுவாக அசைத்தார்.
‘வீடுவரை வந்து போங்கள். உங்களால் ஒரு முக்கியமான காரியம் ஆகவேண்டி யிருக்கிறது’ என்றார் தருமலிங்கம்.