பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அன்று இரவு முழுதும் துங்காமலே விழித்திருந்தார் நடேசன். காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், எப்பொழுதும் போல வேலைக்கும் போனார்.

வைரத்தோடு முடியும் வரை தருமலிங்கம் வீட்டில்தான் வேலை செய்யவேண்டும் என்பதாக இருவருமே சேர்ந்து எடுத்துக்கொண்ட முடிவுதானே!

நடேசன் வேலை செய்கிற நேரம் வரை செய்துவிட்டு, அந்த அரைகுறையானவற்றை, ஒரு பேப்பரில் மடித்து மீனாட்சியிடம் கொடுப்பார். அது வழக்கமாக நடந்து வரும் செயலாகும்.

மீனாட்சியும் அப்படியே பொட்டலத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்துவிட்டு, மறுநாள் நடேசன் வந்ததும் திரும்ப எடுத்துக்கொண்டு வந்து தருவது வழக்கம்.

வழக்கம் போலவே, பொட்டலத்தைக் கொண்டுவந்து நடேசனிடம் கொடுத்துவிட்டு, மீனாட்சி தனது வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். மமாலை வரை வேலை செய்து விட்டு, நடேசன் அரைகுறையாக முடிந்த தோட்டினை எடுத்து மடித்து, காகிதப்பொட்டலத்தை மரியாதையாகக் கொடுத்தார்.