பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

43


நடேசனை அப்படியே குற்றுயிராகப் போட்டுவிட்டு, பொட்டலத்தைத் தன் பைக்குள் போட்டுக்கொண்ட, துரைசாமி, புலியையும் மறந்து வேகமாகப் பிறப்பட்டார்.

துணையாக இருந்த துப்பாக்கியையும் கீழே போட்டுவிட்டார் துரைசாமி. காணக் கிடைக்காத வைரக் கற்களின் மீதே நினைவு இருந்ததால், சீக்கிரம் பேரூருக்குப்போக வேண்டும் என்ற அவசரமே அவருக்கு மேலோங்கியிருந்தது.

பாவம் நடேசன்! பேராசைக்கு அடிமையாகி, அனாதையாக, அந்த கரும்புக் காட்டிற்குள் குற்றுயிராகக் கிடந்தார். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக, மார்பு மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது.

நடேசன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்குப் பக்கத்திலே ஒரு பெரிய மரமும், அதன் கீழே ஒரு சிறிய பரப்பளவு உள்ள ஒரு திடலும் இருந்தது.

அந்த இடத்தை அடைந்ததும், ஆசை உந்தித் தள்ள பையில் உள்ள பொட்டலத்தை எடுத்து, விரித்து, எத்தனைக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் துரைசாமி.