இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
45
தொப்பென்று யாரோ குதிக்கும் சத்தம் கேட்டது. யாரென்று திரும்பி பார்ப்பதற்குள்ளே, இரண்டு மனிதர்கள் இருபக்கமும் வந்து, துரைசாமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.
தங்கள் கையிலிருந்த கயிற்றால், துரைசாமியின் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டி, கீழே உருட்டி விட்டார்கள்.
யார் இவர்கள்? எங்கிருந்து இந்த நேரத்தில் இங்கு வந்தார்கள்? என்பது துரைசாமிக்குப் புரியவில்லை. அவர் பேச ஆரம்பித்தாலோ, அவர்கள் கால்களால் மாறி மாறி துரைசாமி முகத்திலே உதைத்தனர். அதனால், துரைசாமியால் கோபமாகப் பார்க்கமுடிந்ததே ஒழிய, ஏதும் பேச முடியவில்லை.
அவர்கள் இருவரும் பக்கத்து ஊராகிய வயலூரைச் சேர்ந்தவர்கள். மாலை நேரத்தில் மீன் பிடித்து, அவைகளை விற்று வாழும் விவசாயிகள்.