பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அன்று இருவரும் தூண்டில்போட்டு, மீன் பிடித்து, அவைகளைக் கொண்டுபோய் பேரூரில் விற்றுவிட்டு, கரும்புக் காட்டுவழியாக வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டவர்கள்தான்.

‘ஐயோ புலி’ என்று நடேசன் போட்ட கூக்குரலைக் கேட்ட இருவரும், பயந்து ஓடிப்போய், உயர்ந்த அந்த மரத்தின்மீது ஏறிக் கொண்டார்கள். துரைசாமி வருவதும் அவர்களுக்குத் தெரிந்தது. துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அவர் அந்த மரத்தடிக்கு வந்து நின்று, அந்த வைரக் கற்களை எண்ணியதும் தெரிந்தது.

பிறகு என்ன? வைரக் கற்கள் வயலூர் ஆட்களிடம் சிக்கின.

‘நம் தூண்டிலில் இதுவரை மீன்கள்தான் சிக்கின. இப்படி வைரக் கற்கள் சிக்கும் என்று நாம் எண்ணியதே இல்லை’ என்று ஒருவன் சிரித்தான்.

‘சத்தம் போட்டு சிரிக்காதே! இந்த ஆள் சிரித்துத்தான் நம்மிடம் சிக்கிக்கொண்டான். நம்மை யாராவது... என்று முடிப்பதற்குள், “ஆமாம்! மூச்சுவிடும் சத்தம் கூட இனி கேட்கக் கூடாது. பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே! என்று இருவரும் புறப்படத் தொடங்கினர். நடையில் வேகம் இருந்தது.”