பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

53


6. தேடிவந்த திரவியம்!


இராப்பிச்சை எடுப்பதற்காகத் தன் பிச்சைப் பாத்திரத்தை அலம்புவதற்காக, ஆற்றுப் படித்துறைக்கு வந்த ‘பத்மா’ என்னும் பத்து வயதுச் சிறுமி, அந்தப் பொட்டலத்தைப் பார்க்கிறாள்.

பளபளவென்று உள்ளே ஏதோ மின்னுகின்றன. பக்கத்தில் வா என்று அழைப்பது போல அது இருந்தது. ஒன்றும் புரியவில்லை. எடுத்துக் கண்ணருகில் வைத்துப் பார்க்கிறாள். பத்மாவுக்கு புரியவில்லை, என்ன பொருளாக இருந்தாலும் சரி, அதைக் கொண்டு போய், ஊர்க்கோடி சத்திரத்தில் தங்கி இருக்கும் தன் தாயிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

பத்மாவின் பழக்கம் அது தான். எது கிடைத்தாலும் அதைக் கொண்டு போய் தாயிடம் கொடுப்பது தான் பத்மாவின் வழக்கம். தாய் எது சொன்னாலும், சரியாகவே இருக்கும் என்பது