கடவுள் கைவிட மாட்டார்
67
இரயில் புறப்பட்டபோது, புகையாகக் கக்கியது ரயில் எஞ்சின், அற்புதசாமியின் இதயமும் கவலையைப் பெருமூச்சாகக் கக்கிவிட, நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தார். தங்கையிடம் தப்பி வந்துவிட்டோம் என்பதுதான் அவர் பெருமூச்சு வெளியிட்ட சேதியாக இருந்தது.
அவர் வாய் இப்பொழுது அடிக்கடி ‘முருகா, முருகா’ என்று அழைக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு தடவை ‘முருகா’ என்கிறபொழுதும், ‘ஏன்பா’ சும்மா கூப்புடுறெ என்று வந்து எதிரே நிற்பான் மகன் முருகன்.
ஒன்றும் கூறாமல் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பார் அற்புதசாமி.
‘கல்யாண வீட்டிலே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுபவன், இழவு விழுந்த வீட்டிலே எப்படி அழுவான்?’ என்பது ஒரு பழமொழி. அதைப் போல, பைசாவைப் பார்த்தாலே பேயாய்ப்பிடித்துக் கொள்பவர், லட்சக் கணக்கான வைரக் கற்கள் வந்த பிறகு சும்மா இருப்பாரா?
அதனால்தான் முருகனைத் துணைக்கழைத்து உதவி செய்ய கேட்டுக் கொள்கிறார். சின்னப் பையன் முருகனுக்கு அது எப்படி புரியும்?