பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

5


1. நெஞ்சத்தில் நிம்மதி


எங்கு பார்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும், அந்த ஊர் பசுமையாகவே காட்சியளிக்கும். ஊரைச் சுற்றிலும் நஞ்சை வயல்கள். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளி மைதானங்கள். பார்க்க அழகாக இருக்கும்.

இவ்வளவு செழிப்பான ஊருக்கு என்ன பெயர் தெரியுமா? வாழவந்தபுரம். வயல் அறுவடை செய்வதற்காக வேலைக்கு வந்தவர்கள் எல்லோரும், இங்கே தங்கிவிட்டார்கள். குடிசைகள் பலதோன்றின. குடும்பங்களும் பெருகின. வாழ வந்தவர்கள் அனைவரும் மனத்தால் ஒன்று சேர்ந்தனர். குணத்தோடு பழகினர். அது ஊராயிற்று, சீராயிற்று.