பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இராமேஸ்வரத்தில் இறங்கியவுடன், கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டுக் கொண்டார்.

படகுத் துறைக்குப் போவது போன்ற வேலைகளையெல்லாம் பதறாமல் பக்குவமாகவே செய்தார்.

அவருடைய பயணச் சீட்டு, இலங்கைக்குப் போகவேண்டிய அனுமதிச் சீட்டு, அதற்கேற்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது, காலரா போன்ற தொத்துநோய் இல்லாமல் இருக்கிறாரா என்பதற்குரிய இரத்தப் பரிசோதனைகள் எல்லாவற்றையும் கனகச்சிதமாகவும் முடித்துக் கொண்டார்.

ஏதாவது ‘கடத்தல் பொருட்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சாமான்கள் ஏதாவது எடுத்துப் போகிறாரா என்று சுங்க இலாகா அதிகாரிகள், அவருடைய பெட்டி படுக்கை அத்தனையையும் பரிசீலித்தார்கள்.

எல்லாம் எந்தவிதமான தடையுமின்றி நடந்தேறியது. அங்கு இருந்த ஒரு அதிகாரி, என்ன பொட்டலம் என்று கேட்டு விசாரித்தார்.