பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

95


இராமேஸ்வரத்திலிருந்து தந்தி வந்திருக்கிறது. என்னுடைய நண்பர் இன்ஸ்பெக்டர் தந்தியடித்திருக்கிறார். அங்கே வந்தால் எல்லாம் விவரமாகக் கூறுகிறேன் என்பதுதான் முக்கிய சேதி.

உடனே இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டார்கள். இவ்வாறு தருமலிங்கமும், மீனாட்சியும் இராமேஸ்வரம் வந்து, வைரக்கற்களை அடையாளம் காட்டி உறுதி செய்தார்கள்.

எல்லாம் நல்ல படியாகக் கிடைத்தது என்று தருமலிங்கம் மகிழ்ந்தார்.

வெளி நாட்டுக்கு கடத்தப்படாமல், தனக்கு சேர வேண்டிய வைரக் கற்களை தானே காத்துக் கொண்டாள் அம்பிகை என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் மீனாட்சி.

‘தீமை செய்ய முயற்சி செய்தால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவது போலத் தோன்றினாலும், முடிவில் உண்மையே வெல்லும் தீமை தோல்வியே அடையும்’ என்று நடேசன் மட்டும் நினைக்கவில்லை. துரைசாமியும் நினைத்தார். அந்த விவசாயிகளும் நினைத்தார்கள்.

கடவுள் எப்பொழுதும் கைவிடமாட்டார் என்று தருமலிங்கமும் மீனாட்சியும் அம்பிகைக் கோயிலில் பூசை நடத்திக் கொண்டிருந்தார்கள்.