பக்கம்:கடவுள் பாட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பிறவித் துன்பம் அறுத்தருளும்
பெருமா என்னை நீகாப்பாய்!
உறவு துறந்துன் அடிக்கமலம்
உறவே வந்தேன் எனைக்காப்பாய்!
அறிவுக் கண்ணைத் திறந்தவனே
அன்பு நெஞ்சைக் கொடுத்தவனே!
நெறியில் என்னைச் செலுத்துகின்ற
நேர்மை மிக்கோய் எனைக்காப்பாய்!

7


கல்லை மண்ணைப் படைத்தாய்நீ
கடலை மழையைப் படைத்தாய்நீ
புல்லைப் பூண்டைப் படைத்தாய்நீ
புழுவைப் பாம்பைப் படைத்தாய்நீ
நில்லா தோடும் விலங்குகளை
நிலைத்து நிற்கும் மரவகையை
வல்லே பறக்கும் புள்ளினத்தை
வணங்கும் என்னைப் படைத்தாயே!

9


உலகைப் படைத்தாய் நீ, உன்னை
ஒருவ ரேனும் படைக்கவிலை!
உலகைக் காத்து வருகின்றாய்
உனக்கோர் காவல் வேண்டாமே!
உலகை யழிப்பாய் நீயே தான்
உன்னை யழிப்பார் யாருமிலை!
உலகில் உனக்கு மேலாக
ஒன்றும் இல்லை பெருமானே!

9


தேனும் பாலும் சர்க்கரையும்
சேர்த்துக் கலந்த தீஞ்சுவை போல்
யானும் நீயும் உன்னருளும்
அடைந்த கலவிச் சுவை பெரிதாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/11&oldid=1201935" இலிருந்து மீள்விக்கப்பட்டது