பக்கம்:கடவுள் பாட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பூசை செய்தே உனைத்தொழுவேன்
புதிய கருத்தென் மனத்துதிக்கும்
தேசை யுடைய திருவடியைத்
தினமும் பணிவேன் பெருமானே!

17


பெற்ற பிள்ளை மாட்டன்பு
பெரிதும் உடையாள் நற்றாயே
கற்ற பிள்ளை மாட்டன்பு
காட்டும் நல்ல கணக்காயன்
வற்ற ஏழை மாட்டன்பு
வைப்பான் வள்ளல் உன்தாளைப்
பற்ற வந்தோர் யார்க்கும்நீ
பாகு பாடில் அன்புடையாய்.

18


செல்வம் பெற்ற மனிதரெலாம்
செருக்கும் பகட்டும் கொண்டிடுவார்
கல்வி வல்ல புலவரெலாம்
கருவங் கொண்டு தருக்கிடுவார்
வல்ல பதவி புற்றவர்கள்
வணக்க மின்றிச் செருக்கிடுவார்
வெல்லும் இறையுன் அருள்பெற்றோர்
மேலும் எளியர் ஆவாரே;

19


என்னைப் படைத்த பெருமானே
எனக்குத் துணையாய் ஒருபெண்ணைப்
பின்னைப் படைத்துக் கொடுத்தாய்நீ
பெருவாழ் வடைந்தேன் அவளாலே!
என்னில் அவளைச் சேர்த்து நீ
இந்த உலகம் தழைத்திடவே
பின்னும் பிள்ளைக் கணிபடைத்தாய்
பெரியோய் உன்றன் அருளென்னே!

20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/14&oldid=1201931" இலிருந்து மீள்விக்கப்பட்டது