பக்கம்:கடவுள் பாட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

ஆற்றல் என்னும் வேல் தந்தாய்
அச்சப் பேயைக் கொன்றேன்
நான் போற்றும் அறிவாம் வேல்தந்தாய்
பொய்யாம் இருளைக் கிழித்தேன் நான்
தோற்றும் அன்பாம் வேல் தந்தாய்
துன்பப் படையை வென்றேன்
நான் ஏற்றம் மிக்க உன்னருளை
ஏற்றேன் இன்பம் ஏற்றேனே!

70


எங்கோ நல்ல இடமொன்றில்
எப்போ தோஒர் நேரத்தில்
எங்கும் உள்ள இறைவா நீ
என்றன் முன்னே வந்துற்றாய்.
தங்கத் தேரில் வந்தாயோ
தாவும் பரியில் வந்தாயோ
எங்கி ருந்து வந்தாயோ
எதுவும் அறியேன் பெருமானே.

71


உருவாய் வந்து நின்றாயோ
ஒளியாய் வந்து நின்றாயோ
அருவாய் வந்து நின்றாயோ
யாதும் அறியேன் எம்பெருமான்
இருளை யழித்துநீே வந்தாய்
இதய மலரில் குடி கொண்டாய்
அருளைக் காட்டி யாள்கின்றாய்
அறிந்த திதுவே பெருமானே.

72


நிலையில் லாமல் கதவில்லை
நீயில் லாமல் நானில்லை
தலையில் லாமல் வாவில்லை
தனையில் லாமல் உலகில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/29&oldid=1202018" இலிருந்து மீள்விக்கப்பட்டது