பக்கம்:கடவுள் பாட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


வைது தடையாய் நிற்கின்றார்
வழியில் லாமல் தவிக்கின்றேன்.
மெய்யாம் பொருளே உனையல்லால்
வேறார் என்னை உய்விப்பார்!
157
அறியா திருந்த நாளெல்லாம்
ஐயா உன்னைத் துாற்றினேன்
அறிவு வந்த பின்னாலே
அன்போ டேற்றிப் போற்றினேன்.
நெறியும் முறையும் உனை நம்பி
நினைத்துத் தொழுத பின்னாலே
குறியாய் வழியாய்க் கொள்கையாய்க்
குணமாய்க் கொண்டேன் பெருமானே!
158
இறைவன் அருளைப் பெறுதற்கே
இவனோ தகுதி யுள்ளானென்
றறையு மாறு சொன்னார்ஒர்
அடியார், ஐயா, என்பாலே
குறையுண் டென்றால் அதுகளையும்
கொள்கை யுனக்கு வேண்டாமோ
முறையோ என்னைக் கைவிடுதல்
முதல்வா ஆற்றேன் ஆற்றேனே!
159
உன்றன் பெருமை யறியாமல்
ஒழிந்த நாட்கள் எத்தனையோ?
உன்றன் அருளை வேண்டாமல்
உருண்ட நாட்கள் எத்தனையோ?
என்றன் பிழையைப் பொறுத்தருள்வாய்.
இனிதுன் அருளைப் பொழிந்திடுவாய்.
என்றும் இனிமேல் உன்னடியே
ஏற்றிப் பணிவேன் பெருமானே!
160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/54&oldid=1211760" இலிருந்து மீள்விக்கப்பட்டது