பக்கம்:கடவுள் பாட்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


பழிக்கஞ் சாமல் நான்செய்த
பாவத் தொகுப்பின் கறையெல்லாம்
அழிக்க உன்றன் துணையைத்தான்
ஐயா வேண்டிக் கிடக்கின்றேன்.
விழித்த கண்ணோ டொருமடுவில்
விழுமோர் மூடன் போல்பாவக்
குழிக்குள் விழுந்த எனைக்காக்கக்
கொஞ்சம் கருணை புரிவாயே!
161
அறியா தொருவன் பிழைசெய்தால்
ஐயா உன்றன் அருட்பாங்கால்
நெறியில் நிற்கும் படிகாப்பாய்
நீஎன் றறிவேன் பெருமானே.
அறிவி ருந்தும் ஆணவத்தால்
அடியேன் செய்த பிழையெல்லாம்
வெறியில் மயங்கிச் செய்ததென
விடுவாய் கருணை புரிவாயே!
162
மண்ணின் உலகம் பரந்ததுதான்
மக்கள் தொகையும் கோடிகள்தான்
புண்ணுற் றொருவன் மனம்வாடிப் .
புழுங்கித் தவிக்கும் போதவனைக்
கண்ணுற் றுதவும் உளத்தைத்தான்
காணத் துடித்தேன் எம்பெருமான்
அண்ணல் உன்சீர் அடியன்றி
யாங்குப் புகலென் றடைவேனோ?
163
என்னைக் காக்கும் என்னிறைவா
என்றும் என்றன் அருகிருப்பாய்
உன்னை யன்றி ஒருதுணையும்
உலகில் எனக்குக் கிடையாதே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/55&oldid=1211764" இலிருந்து மீள்விக்கப்பட்டது