பக்கம்:கடவுள் பாட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


விண்ணின் ஒளிபோல் அணுவுள்ளும்
விரிந்து பரந்து நிற்குமுனை
எண்ணு முளத்தின் உள்ளேநீ
இருப்பாய் காட்சி கொடுப்பாயே.
178
வெள்ளை முத்துப் பல்தெரிய
விரிந்து சிரிக்கும் செவ்வாயும்
கள்ளை வெல்லும் மொழிபேசும்
கரிய மணிகள் உருள்விழியும்
கொள்ளை கொள்ள வயமிழக்கும்
குற்றம் புரிய வொட்டாமல்
உள்ளந் தன்னை ஆட்கொள்ள
உரிய இறைவா வருவாயே.
179
மாசில் லாத மணிக்குன்றே
மனத்தில் உறையும் அருளரசே!
பேசப் பேச வளர்ந்துமிகப்
பெரிதாய்த் தோன்றும் உன்புகழே
நேசங் கொள்ளக் கொள்ளமிக
நெருங்கி வருமுன் திருவடியே
பூசை செய்யச் செய்யமிகப்
பொங்கி மகிழும் என்னுளமே!
180
அழுதேன் அழுதேன் தாள்பற்றி
அகன்ற தெல்லாத் துன்பமுமே
தொழுதேன் தொழுதேன் திருவடியைத்
தோன்றிற் றின்பப் பேரமுதே
முழுதும் முழுதும் அதைப்பருக
முனைந்தேன் பொற்றாள் அடிநிழலே
வழியென் றெண்ணிக் கிடக்கின்றேன்
வாழ்த்தி யருள்வாய் பெருமானே,
181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/60&oldid=1211781" இலிருந்து மீள்விக்கப்பட்டது