பக்கம்:கடவுள் பாட்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


அடைதற் கியன்ற தென்றாலே

ஐயா உன்றன் திருவடியே!

அடைதற் பெற்றார் அகலார்பின்

ஐயா உன்றன் திருவடியே!

192

அரியாய் உன்னை அறிந்திடவே

அயரா தொழியா தேமுயன்றேன்

பெரியாய் உன்னைக் கண்டறியும்

பேறு கிட்டா அந்நிலையில்

புரியா மனத்தின் தவிப்பாலே

பொங்கிப் பித்துப் பிடித்தவனாய்

எரியும் தீயில் விழச்சென்றேன்

எதிரில் வந்து தடுத்தாண்டாய்.

193

ஒல்லாய் உன்னை அறிந்திடவே

ஓயா தொழியா தேமுயன்றேன்

வல்லாய் உன்னைக் கண்டறியும்

வாய்ப்புக் கிட்டா அந்நிலையில்

பொல்லா மனத்தின் தவிப்பாலே

பொங்கிப் பித்தம் கொண்டவனாய்

கொல்லுங் கடலில் விழச் சென்றேன்.

குறுக்கில் வந்து தடுத்தாண்டாய்.

194

ஒன்றற் கரியாய் உனையறிய

ஒயா துறங்கா தேமுயன்றேன்

அன்றக் காலை அறியும்பே

றடையா திருந்த அந்நிலையில்

பொன்று மனத்தின் தவிப்பாலே

பொங்கிப் பித்துற் றலைந்தவனாய்க்

குன்றி னுருண்டு விழச்சென்றேன்

குறுகி வந்து தடுத்தாண்டாய்.

195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/64&oldid=1211794" இலிருந்து மீள்விக்கப்பட்டது