இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
அடைதற் கியன்ற தென்றாலே
- ஐயா உன்றன் திருவடியே!
அடைதற் பெற்றார் அகலார்பின்
- ஐயா உன்றன் திருவடியே!
192
அரியாய் உன்னை அறிந்திடவே
- அயரா தொழியா தேமுயன்றேன்
பெரியாய் உன்னைக் கண்டறியும்
- பேறு கிட்டா அந்நிலையில்
புரியா மனத்தின் தவிப்பாலே
- பொங்கிப் பித்துப் பிடித்தவனாய்
எரியும் தீயில் விழச்சென்றேன்
- எதிரில் வந்து தடுத்தாண்டாய்.
193
ஒல்லாய் உன்னை அறிந்திடவே
- ஓயா தொழியா தேமுயன்றேன்
வல்லாய் உன்னைக் கண்டறியும்
- வாய்ப்புக் கிட்டா அந்நிலையில்
பொல்லா மனத்தின் தவிப்பாலே
- பொங்கிப் பித்தம் கொண்டவனாய்
கொல்லுங் கடலில் விழச் சென்றேன்.
- குறுக்கில் வந்து தடுத்தாண்டாய்.
194
ஒன்றற் கரியாய் உனையறிய
- ஒயா துறங்கா தேமுயன்றேன்
அன்றக் காலை அறியும்பே
- றடையா திருந்த அந்நிலையில்
பொன்று மனத்தின் தவிப்பாலே
- பொங்கிப் பித்துற் றலைந்தவனாய்க்
குன்றி னுருண்டு விழச்சென்றேன்
- குறுகி வந்து தடுத்தாண்டாய்.
195