பக்கம்:கடவுள் பாட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் பாட்டு

உள்ளி நின்னை வணங்கிடுவார்
உள்ள மெல்லாம் நிறைந்தவனே
கள்ள மின்றி உன்பெருமை
கதைப்பார் பங்கில் இருப்பவனே!
வெள்ளக் கருணைத் திறங்கேட்டு
வியப்பார்; வியந்து கூவிடுவார்
அள்ளி மலர்தூய் அடிபணிவார்
அகத்தில் உறையும் பெருமானே!

1


விண்ணும் மண்ணும் நிறைந்தண்ட
வெளியும் கடந்து நின்றவனே
எண்ணில் அடங்காப் பேராற்றல்
இயைந்த மூலப் பெருமானே
கண்ணில் காணும் சுடர்க் கெல்லாம்
கனிந்து நல்கும் ஒளியுடைய
வண்ணப் பிழம்பே பேரொளியே
வணக்கம் உன்றன் பொன்னடிக்கே,

2


அறமே வடிவாய் உள்ளவனே
அழுக்கு மலங்கள் அற்றவனே
திறமே மிக்க மேலவனே
தெளிந்த நீரைப் போன்றவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/9&oldid=1201939" இலிருந்து மீள்விக்கப்பட்டது