பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


‘இல் கொண்டு புகுதல் என்றால், வீரனது நடுகல்லைச் சுற்றிக் கோயில் கட்டி உள் சென்று வழிபடுதல் என்று பொருளாகும். இவ்வாறாக, மாண்டு போன மற வர்க்குக் கல்நட்டுக் கோயில் கட்டி அவர்களைக் கடவு ளாக்கிய வரலாறு புறப்பொருள் வெண்பா மாலை என் னும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலை யும் இலக்கண நூல்களாகும். இவற்றில் சொல்லப் பட்டுள்ள இலக்கணச் செய்திகளுக்கு, அகநானூறு, புற நானூறு, திருக்குறள் முதலிய (இலக்கிய) நூல்களில் உள்ள சில பாடல்கள், இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்தின் உரையாசிரியராகிய நச்சினார்க் கினியர் என்பவர் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடா மலேயே பல பாடல்களை இந்த ஆறு துறைகளுக்கும் இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றை விரிப்பின் பெருகும்.

ஈண்டு, மதுரை மருதனிள நாகனாரால் எழுதப்பட்டு அகநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ள பாடல் பகுதியொன்றின் கருத்தைக் காணலாம்: போர் மறவர்களின் பெய ரும் பெருமையும் பொறித்து வழிதோறும் நடுகற்கள் நடப்பட்டுள்ளன; அவற்றின் மேல் மயில் பீலி (தோகை) மாலைபோல் சூட்டப்பெற்றுள்ளது; ஒல்வொரு கல்லின் முன்னும் வேல் ஊன்றி அவ்வேலின் மேல் கேடகப் பலகை சார்த்தப்பட்டுள்ளது; வீரனும் வேலும் கேடகமு மாகக் காட்சி யளிக்கும் அந்த இடம், ஒரு போர்க்களம் போல் தோன்றி அச்சம் தரத்தக்கதாக உள்ளதாம். இதோ அப்பாடல் பகுதி: -

‘ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குகிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்று முனை
கடுக்கும் வெகுவரு தகுங் கானம் ... ’