பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


பதிற்றுப் பத்து நூலின் ஐந்தாம் பத்தின் பதிகத்தில், கண்ணகிக்கு உரிய சிலைக் கல்,

‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (அடி-3)

எனக் கடவுள் கல்லாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிமேகலையிலும் கண்ணகிக் கல் தெய்வக் கல்’ (26-89) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், அகநானூற்றில் நடுகல்தொடர்பான சுவை யான செய்திகள் மேலும் சில உள. அவை வருமாறு :

“செக்காய் வருந்து பசிப் பினவொடு.
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை ..”

(அகம்-களிற்றியானை நிரை-53)

என்னும் சீத்தலைச் சாத்தனாரின் பாடல் பகுதியில், கோடையில்-பாலை நிலத்தில் ஆண் நாய் பெண் நாயு டன் நடுகல்லின் இனிய நிழலிலே தங்கியிருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது போல, கோடையில்-பாலை நிலத் தில் நடுகல்லின் நிழல் இனிமையாய் உள்ளதாம். அடுத்து,

‘சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் காட்பலிக் கூட்டும் சுரன்’

என்னும் எயினந்தை மகன் இளங்கீரனார்’ என்கிற புலவரின் பாடல் பகுதியின் அகம் -.மணிமிடைப் பவளம் -289) கருத்தாவது:-கற்குவியலில் வீரர்கள் நடுகற்களாய் உள்ளனர், அந்த நடுகல் மறவர்கட்குக் காட்டு மல்லிகை மலர்கள் காலை வழிபாட்டுப் பலியாகப் பயன்படுத்தப் படுகின்றனவாம். அடுத்து,