இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏன் இந்த உலகம்?
ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்? ஏன் இந்த உலகம்.........?......?
பதில் எளிதில் கிடைக்கவில்லையே! ஒருவேளை இதற்குப் பதிலே இல்லையா?
“ஏன் இல்லை; பதில்கள் நிரம்ப உள்ளனவே," என்கின்றனர் பலர்.
“உயிர்கள் உய்வதற்காகக் கடவுள் இவ்வுலகத்தைப் படைத்தார்" எனப் பொதுவாகப் பலரும்- பல பிரிவினரும் கூறுகின்றனர். அவர்தம் கூற்றுகளுள் சில காண்பாம்:
கடவுள் ஒருவர் உள்ளார் என்பது எவ்லாரும் கூறுவது. இந்த எல்லாருள்ளும் ஒவ்வொருவர் ஒவ்வொரு கடவுளைக்குறிப்பிடுகின்றனர். அவ்வளவுகடவுள் பெயர்களையும் பட்டியல் படுத்தினால் அது மிகவும் நீளும். எனவே, கடவுள் என்னும் பொதுப் பெயரையே பயன்படுத்துவோம்.
படைப்பின் நோக்கங்கள்:
உயிர்களுக்காகக் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார்; உலகில் பல பொருள்களையும் உண்டாக்கினார்