இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யான் செல்லும் வழியில் எந்த மதத்துக் கோயில் தென்படினும், என்னை அறியாமல் என் இருகைகளும் கூப்பிக் கும்பிடும் ; சில இடங்களில் அரைக் கும்பிடாவது போடும்.
அப்படியிருந்தும், இந்நூலின் முற்பகுதியைப் படிப்பவர்கள் என்னை 'நாத்திகன்’ என்று கூறக் கூடும். நூல் முழுதும் படித்த பின் எனது கொள்கை புலனாகும்.
ஆத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் கடவுளர்களின் நிலைமையினும், யான் கும்பிடும் கடவுளர்களின் நிலைமை வேறு.
கடவுளர்கள் எவ்வாறு கடவுளர்களானார்கள் என் பதிலேயே ஆத்திகரும் யானும் வேறுபடுகின்றோம்.
நூல் முழுதும் படித்தபின், நடுநிலைமையோடு தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன்.
இந்நூலை நன்முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த வெற்றி அச்சகத்தாருக்கு என் நன்றி உரியது.
சுந்தர சண்முகன்
7-11-1988
7-11-1988