பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


அவ்வப்போது மூளையில் பதிவாகிவிடுகின்றன. மேலோடு கவனம் செலுத்திய செய்தி, மேலோடு மூளையில் பதிவாகிறது; இது விரைவில் மறந்து போகக்கூடும். விரைவில் நினைவுக்கு வராமலும் இருக்கக்கூடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்கும் செய்தி மூளையில் நன்றாகப் பதிவாகிறது; விரைவில் மறக்காது-விரைவில் நினைவுக்கு வரும். தாளின் மீதோ-வேறு எதன் மீதோ-பல முறை மேலும் மேலும் எழுதினால் ஒன்றும் படிப்பதற்குப் புரியாது. ஒரு முறை எழுதியதை அழித்தால்தான், மறுமுறை எழுது வது புரியும். அதே போல, நாடாவில் (டேப் ரிகார்டர் Tape Recorder) ஒலியை ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் தான், மீண்டும் அவ்வொலியைக் கேட்க முடியும். இன்னொரு முறை அதிலேயே ஒலியைப் பதிவு செய்ய வேண்டுமெனில், முதலில் செய்த பதிவை அழித்த பிறகே மறுபதிவு செய்ய முடியும்-கேட்கவும் முடியும். நம் மூளை மேற்கூறிய பொருள்கள் போன்ற தன்று; ஆண்டுக் கணக்கில், புதிய புதிய செய்திகள், மேலும் மேலும், மூளையில் எத்தனை முறை பதிவாகிக் கொண் டிருந்தாலும், அத்தனை செய்திகளும், குழப்பம் இன்றி, எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரும்; எல்லாம் தெளிவாகவே இருக்கும். இத்தகைய வியத்தகு ஆற்றலும் அமைப்பும் மூளைக்கு உண்டு.

எனவே, ஒருவன்-இரவில் இருளில்-தனி அறையில் தனியாகப் படுத்துக் கொண்டு, மூளையில் முன்பு பதிவாகி யுள்ள எத்தனைச் செய்திகளை மாறி-மாறி நினைத்தாலும், அத்தனைச் செய்திகளும் மாறி-மாறி நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கும். இங்கே தூண்டல் எதுவும் இல்லையே என்று வினவலாம். ஏன் தூண்டல் இல்லை! அவன் அன்றைக்கு அனுபவித்தவை தொடர்பான சூழ்நிலையும், அதன் விளைவாக மறு நாளோ-எதிர் காலத்திலோ செய்ய வேண்டியவை தொடர்பான சூழ்நிலை