பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92




பங்குக்கு வந்த செல்வம்
பகலெல்லாம் தூங்கித் தீர்க்கும்;
கங்குலில் கணவர் என்னைக்
கனைப்பினால் அழைப்பார்; பின்னர்
எங்களுக் குள்ளே சற்றே
இடைவெளி குறையும்; ஆலைச்
சங்கைப்போல் குழந்தை கத்தும்!
சட்டென்று நகர்ந்து கொள்வோம்!