பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


பழமையின் பெயரா லிந்தப்
பாரத நாட்டில் நீங்காப்
பிளவினைச் சமயம் சாதி
பெருக்கிச்சீ ரழித்திட் டாலும்
பழமையிற் செழித்த நம்பண்
பாட்டினைப் போற்றி யன்பால்
தொழுதனன் இறுதி யாகத்
துணைக்கரங் குவித்து, வாழி!