பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


காதல் என்பது காலத்தை வென்றது !
பரந்தஇப் பெருங்கடல் வாழ்க்கையில், பணமெனும்
தெப்பக் கனவு காணும் செல்வனோ
அப்பக் கனவு காணும் வறிஞனோ,
யாரா யிருப்பினும் அவன்தன் மனைவியை
மாறா அன்புடன் மலர்போல் மதித்தால்,
அம்மலர் மங்கை வாழ்க்கையில்
நன்மணம் பரப்புவாள் நல்குவாள் இன்பமே !