பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33




விடுதலைப் போரில் வென்ற நாங்கள்
இமையக் கூரையில் ஏறி, இந்நாள்
அமைதிப் போருக்கு அறைகூவுகின்றோம்.
உடைந்தஇவ் வுலகை ஒன்றாக்கு தற்குப்
படையமைக் கின்றோம். பண்டைநாள் தொட்டுப்
பொருளறம் ஞானம் புகட்டிய நாங்கள்
அருளறப் போர்க்குக் கொடியெடுக் கின்றோம்.
கொலைப்போர் உலகை ஒழித்தே, அமைதியை
அழைப்போர் எங்கள் அணியில் சேரலாம்.
இறந்தகா லத்தும் எதிர்கா லத்தும்
இறவாத் தன்மைய தெங்கள் சுதந்தரம்.
பெற்றஇச் சுதந்தரக் குறிக்கோள்
மற்றவர் வாழ நாம்வாழ் வதுவே !