பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


புகுத்துகின்ற மடமையினால் , இந்த நாட்டில்
புதுப்பாதை மலராது ; தமிழ கத்தைப்
பகுத்தறிவால் ஆள்பவரே வேண்டும்’ என்று
பறைசாற்றிக் கொண்டிருந்தார் பெரியார்: இன்று
பகுத்தறிவால் ஆள்கின்றோம் ; எம்மை என்றும்
பாராட்டிக் கொண்டிருத்தல் தந்தை வேலை.
மிகுத்தபுகழ் பெற்றவரின் சிலையை இந்த
மேதினத்தில் மகிழ்ச்சியுடன் திறந்து வைத்தேன்.

சிறுகள்ளும் பெருங்கள்ளும் ஒளவைக் கீந்து
சிறப்பான வரலாறு பெற்று, நெல்லி
அருங்கனியும் அவளுக்குக் கொடுத்தான், இவ்வூர்
அரசியலில் நிலைத்துவிட்ட அதியன் ; நானோ
பெருங்குதிரைப் பேரரசன் இல்லை ; மாற்றார்
பேச்சம்புக் கீடு தரும் அமைச்சன். அந்தக்
கருங்கனியை நான்பெற்றால் பெரியா ருக்குக்
கட்டாயம் மகிழ்ந்தளிப்பேன் ! வாழ வைப்பேன்.