பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61



கண்களால் உமதெ ழுத்தைக்
கவ்விய வுடனே, காய்ந்த
புண்களை மீண்டு மின்று
        புதுப்புண்கள் ஆக்கிக் கொண்டேன்.
எண்பது முறைப டித்தேன்;
        இதயத்தில் வீக்கம் பெற்றேன்.
கண்களே வாயில், ஏங்கும்
        காதலர் துன்பத் துக்கே!


புல்லர்கள், நமது வாழ்வைப்
புரட்டிய இரக்க மில்லார்,
பல்கலைக் கழக மேறிப்
படுகொலைப் பட்டம் பெற்றோர்
கொல்வதற் கிலக்காய் உம்மைக்
குறிக்கின்றார்; நீரும் நானும்
கல்லறைக் குள்ளே கூடக்
கண்துஞ்ச ஒப்ப மாட்டார்.

சிந்தையில் உம்மை எண்ணிச்
செபமாலை உருட்டு கின்றேன்
நொந்ததம் நைந்த வாழ்வை
நூல்களாய் எழுதி, இந்தப்
பந்தயச் சமுதா யத்தில்
பறையறை வித்தால் என்ன?
விந்தையில் வுலகை மீளா
வெட்கத்தில் சாய்த்தால் என்ன?