பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74



நூலேணிக் காதலுக்கு
நோக்கத்தால் வரவேற்புத்
தந்த பெண்ணே !
போலோனில் உன்பொருட்டுப்
போடட்டு மாகாதற்
புதுக்கூ டாரம் ?
காலார நடந்தோர்நாள்.
கால்வாயின் கரையோரம்
காதல் நட்டு
மாலானோம் ; இனியென்றும்
மாறாத காதலுக்குள்
மாட்டிக் கொண்டோம்.


குமரிமலர் கூடிவிட்டுக்
குளிக்காமல் திரிகின்ற
வண்டை, அந்திச்
சமயத்தில் கதவடைக்கும்
சச்சரவுத் தாமரையைப்
பாடிப் பாடி
அமுதொழுகும் ஆங்கிலத்தை
ஐயய்யோ ! கறைசெய்தேன் !
இரவில் கூம்பாக்
குமுதமல ரேஉன்னைக்
குளிப்பாட்டு வேன் ; இனியென்
கவிதை யாற்றில் !