பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


துணையால் இயங்கும் முகம் மழிக்கும் கருவிகளும் (Shaving set) குளியல் அறையில் உள்ளன. பன்னாட்டு மக்களால் பரிசளிக்கப்பட்ட அக் கருவிகள் யாவும் பொன்னால் ஆனவையே.

வாத்திகன் மாளிகையைக் குளிர் காலங்களில் சூடாக்குவதற்காகவும் சில அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்புக்களில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், போப்பாண்டவர் இருக்கிற அறையைச் சூடாக்குவதற்குத் தனியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித பீட்டர் ஆலயம் தில்லையிலுள்ள நடராசப் பெருமான் கோவிலை நாம் அறிவோம். அங்கு ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்குப் பொன்னம்பலவன் என்றும், அவன் காலைத் தூக்கி ஆடும் மேடைக்குப் பொன்னம்பலம் என்றும் பெயர்களுண்டு. தில்லை நடராசன் கோவில் கொண்டிருக்கும் கருவறை பொன்னோடுகளால் வேயப் பெற்றது. தில்லைக் கோவிலுக்குப் பொன் வேய்ந்த பெருமை பிற்காலச் சோழர்களையே சாரும்.

இதே போல வாத்திகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் மேல் முகடு பொன் தகடுகள் பதித்து மெருகிடப் பட்டுள்ளது. இயேசு நாதருக்குப் பிறகு கிறித்தவ சமயத்தலைவரான புனித பீட்டரின் நினைவாகக் கட்டப்பட்டதே இத் தேவாலயம். புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் இவருடைய சமாதியைக் கண்டறிந்து பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தினர்.