பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அணிகள், வைர மாலைகள் போன்ற ஆடம்பரப் பொருள்களையும் வைத்துப் புதைத்தனர். அரசனுடைய ஆவி அமர்ந்து களைப்பாற அரியணையும், படுத்துறங்கப் பஞ்சணையும் உடன் வைத்தனர். இன்னும் வேறு தேவைப் பொருள்களான ஆடு, மாடு, குதிரை, தானியம், பொன் ஆகியவற்றையும் உடன் வைத்து மூடினர். அரசனின் பிரிவைத் தாங்கமுடியாத நெருங்கிய உறவினரும், கணவன் ஆவியோடு இன்பவாழ்வு நடத்த விரும்பிய மனைவியரும், அறிவுரை கூறும் அமைச்சரும்கூடப் பிரமிடுகளில் வைத்து மூடப்பட்டனர்.

ஒவ்வொரு பிரமிடுக்குக் கிழக்கிலும் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவில்கள் பிரமிடுகளைவிடப் புனிதமான இடங்களாகக் கருதப்பட்டன. உலகில் வாழும் ஒரு மனிதன் பசியால் வாடுவது போலவே, ஆவிகளும் வாடுகின்றன என்று எகிப்தியர் கருதினர். எனவே நாள்தோறும் மூன்று வேளையும், அறுசுவை உண்டியை அக் கோவில்களில் வைத்துப் படைப்பர், இறந்தவரின் ஆவி அவ்வுணவை ஏற்றுக்கொள்கிறது என்று நம்பினர். ஒவ்வோர் எகிப்திய மன்னனும் தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் உடலைப் பாதுகாப்பதற்கு வேண்டிய பிரமிடையும், அதன் கிழக்கில் ஒரு கோவிலையும் எழுப்பிவிடுவது வழக்கம்; அதனுடன் தனக்குரிய விளை நிலத்தின் ஒரு பகுதியை, அக்கோவிலுக்கு எழுதிவைப்பான்; அந்நிலத்தில் விளையும் தானியங்களைக்கொண்டு, இறந்த பிறகு தன் ஆவிக்கு உணவு படைக்க வேண்டும் என்று